Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் : போதையில் மருந்து வழங்கிய மருந்தாளுநர்? :

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மருந்தாளுநர் சுரேஷ் என்பவர் பணியில் இருந்தார். சுரேஷிடம் மாத்திரை வாங்கச் சென்றவர்களை, கூட்டம் இல்லாத நிலையிலும் நீண்டநேரம் காக்க வைத்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர் நிதானமின்றி தள்ளாடியபடி பேசியுள்ளார். அவர் போதையில் இருந்ததை அறிந்த மக்கள், அவரது செயல்பாட்டை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்-ல் பதிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகம், மருந்தாளுநர் சுரேஷுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் அவரது நிலையைக் கண்காணிக்காத முதன்மை மருந்தாளுநர், மருந்தாளுநர் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களின் பதிலைப் பொறுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x