Published : 15 May 2021 03:14 AM
Last Updated : 15 May 2021 03:14 AM

திருச்சியில் 1,224 பேருக்கு புதிதாக கரோனா தொற்று : காரைக்காலில் இதுவரை 9,134 பேர் பாதிப்பு

திருச்சி/ காரைக்கால்

மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக திருச்சியில் 1,224 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் 207, கரூர் 319, நாகப்பட்டினம் 396, பெரம்பலூர் 140, புதுக்கோட்டை 342, தஞ்சாவூர் 618, திருவாரூர் 324, திருச்சி 1,224 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர் களில் அரியலூர் 1, கரூர் 8, நாகப்பட்டினம் 2, பெரம்பலூர் 3, தஞ்சாவூர் 7, திருவாரூர் 1, திருச்சி 8 என மொத்தம் 30 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 667 பரிசோதனை முடிவுகளில் 224 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 9,134 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 115 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 1,807 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x