Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத் தில் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா, சென்னையில் இருந்து நேற்று புதுக்கோட்டை திரும்பினார்.
பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் கவச உடை அணிந்தபடி சென்று ஆய்வு செய்தாார். அப்போது, அங்கு தங்கி இருந்த தொற்றாளர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர், சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளதா என மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் எம்எல்ஏ கூறியது: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவை யான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்து வர்கள் மற்றும் நோயாளிகளுக் கான நிதி ஒதுக்கீடு விரைவில் செய்யப்பட்டு, சத்தான உணவு வழங்கப்படும். மருத்துவ கட்ட மைப்புகள் படிப்படியாக மேம் படுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT