Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM
சேலம் மாவட்டத்தில் நேற்று 489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 280 பேரும், ஓமலூரில் 21, ஆத்தூரில் 19, தலைவாசலில்14, வீரபாண்டி, பனமரத்துப்பட்டியில் தலா 13, சங்ககிரியில் 12, வாழப்பாடியில் 10, எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, கெங்கவல்லியில் தலா 9, அயோத்தியாப்பட்டணத்தில் 8, நங்கவள்ளி, கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா 7, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 6 பேரும் பாதிக்கப்பட்டனர். தொற்று கண்டறியப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.நேற்று 490 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை 19 ஆயிரத்து 811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 457 பேருக்கு கரோனா தொற்று புதிதாக ஏற்பட்ட நிலையில், 297 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது 2799 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதனிடையே, கடந்த 18-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது ஆண் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட 80 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் 91 இடங்கள் தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் 375 குடும்பங் களைச் சேர்ந்த 7831 நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படை தேவைகளை கண்காணிக்க வட்டார அளவிலான மற்றும் கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT