Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.8.54 லட்சம் வசூல் :

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்தூர், செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள கிராமப் பகுதிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மேற்கண்ட கிராமப் பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மொத்தம் ரூ.8.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x