Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் - ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என்.சுப்பையன் தெரிவித்தார்

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா என்பது உடனடி யாக முடிந்துவிடக்கூடியது அல்ல. தொடர்ந்து, இதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடன், துணிவுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தேவையின்றி வெளியே வராமல் இருப்பது, தேவை ஏற்பட்டால் அத்தியாவசியத்துக்கு மட்டுமே வெளியே வருவது போன்ற சுயக் கட்டுப்பாட்டுகளுடன் இருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமில்லாமல், இதர பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வெளி நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பில் உள்ளன. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் இருந்தால், அவர்களுக்குத் தேவையான அளவுக்குக் கொடுக்கக்கூடிய படுக்கைகளும் தயாராக இருக்கின்றன. தேவைக்கேற்ப கூடுதலாக படுக்கை வசதி செய்வதற்கும் ஆலோ சனை செய்து வருகிறோம். தேவை ஏற்படும் வரை காத்திருக்காமல், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாகத் தயார் செய்து விடுவோம். எனவே, பொதுமக்கள் எதற்கா கவும் அச்சப்பட வேண்டாம்.

கரோனா தொடர்பான அறிகுறி அதிக அளவில் இருந்தால் மட்டுமே, மருத்துவ மனைக்கு வரலாம். பாதிப்பு குறைவாக இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, பாதுகாப்பாக இருக்கலாம். லேசான காய்ச் சல் இருப்பதால் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கிராமங்கள்தோறும் பல்ஸ் ஆக்சி மீட்டர் இருக்குமாறு ஏற்பாடு செய்து வருகிறோம். இதன் மூலம் எவ்வளவு ஆக்சிஜன் அளவு குறைந்தி ருக்கிறது என்பதை அறிய முடியும். பொதுமக்களின் பாதுகாப்புக்கான அனைத்து விதமான நடவ டிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. தொடர்ந்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவில் ஆயிரத்துக் கும் அதிகமான படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதி அல்லாத படுக்கைகள் உள்பட மொத்தம் 4,400 படுக்கைகள் உள்ளன. இதில், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளைக் கூட, தேவைப்படும் நேரத்தில் ஆக்சிஜன் வசதி உள்ளவாறு மாற்ற முடியும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை என்ப தால், அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றன என்றார்.

மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x