Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் - கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 49% படுக்கைகள் காலியாக உள்ளன :

சேலம்

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 51.41 சதவீதம் படுக்கைகள் நிரம்பின.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தற்போது நாளொன்று 500-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கரோனா ஆற்றுப்படுத்தல் மையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்றுக்கு ஆளானவர்கள் சிலர் வீடுகளிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்திட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 774 படுக்கைகள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் உள்ள 940 படுக்கைகளில் 24-ம் தேதி வரை 410 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அரசு மருத்துவமனை படுக்கைகளில் 43.62 சதவீதமாகும்.

இதேபோல, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 1,834 படுக்கைகளில் 1,016 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தனியார் மருத்துவமனை படுக்கைகளில் 55.40 சதவீதமாகும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,774 படுக்கைகளில், 1,426 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை படுக்கைகளில் 51.41 சதவீத படுக்கைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x