Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

சேலத்தில் 275 பேருக்கு தொற்று உறுதி : ஈரோட்டில் 226 பேருக்கு பாதிப்பு

சேலம் / ஈரோடு

சேலத்தில் நேற்று 275 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனை களில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டனர்.

சேலத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 289 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 137 பேரும், ஓமலூரில் 15 பேர், மேச்சேரியில் 13 பேர், ஆத்தூர், தாரமங்கலத்தில் தலா 11 பேர், வீரபாண்டியில் 9 பேர், மேட்டூரில் 8 பேர், மகுடஞ்சாவடி, காடையாம் பட்டியில் தலா 7 பேர், நரசிங்கபுரம், எடப்பாடியில் தலா 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று தொற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து 186 பேர் வீடு திரும்பினர். தற்போது, மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 1,546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 226 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 16 ஆயிரத்து 922 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 15 ஆயிரத்து 679 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1091 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்று காரணமாக இதுவரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x