Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

‘ரங்கம் ரங்கநாதர் கோயிலை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ :

திருச்சி

ரங்கம் ரங்கநாதர் கோயிலை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரங்கம் ரங்கநாதர் கோயிலை உலக புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என 2014-ம் ஆண்டு யுனெஸ்கோவுக்கு பரிந் துரை செய்யப்பட்டது.

ஆனால் அதற்குப்பின் 7 ஆண்டுகளாகியும் இதுவரை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உலக புராதன நாளான நேற்று திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக் குழு உறுப்பினரும், மூளை நரம்பியல் நிபுணரான டாக்டர் எம்.ஏ.அலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிகழாண்டிலாவது ரங்கம் ரங்கநாதர் கோயிலை உலக புராதனச் சின்னமாக அறிவிக்க தமிழ்நாடு அரசும், இந்திய அரசின் தொல்லியல் துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x