Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

திண்டுக்கல்லில் 4 இடங்களில் : கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்து வருகிறது. இப்பணியை விரிவுபடுத்தும் விதமாக நாகல்நகர், கோட்டை மாரியம்மன் கோயில் வளாகம், கடைவீதி உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல் நகரில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அதிகாரி லட்சியவர்னா தலைமை வகித்தார். இதில் நாகல்நகர் பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சுகாதார அதிகாரி லட்சியவர்னா கூறுகையில், 4இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தொடர்ந்து பகுதி வாரியாக சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x