Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

சேலத்தில் ஒரேநாளில் 128 பேருக்கு கரோனா தொற்று :

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 128 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 100-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அதில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 74 பேர், ஓமலூரில் 7 பேர், வீரபாண்டியில் 6 பேர், தாரமங்கலம், சேலம் ஊரகம், தலைவாசல் ஆகியவற்றில் தலா 5 பேர், நங்கவள்ளியில் 4 பேர், காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம் ஆகியவற்றில் தலா 3 பேர், எடப்பாடி, கொளத்தூர், பனமரத்துப்பட்டி, ஆத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 பேர் உள்படமொத்தம் 128 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் குணமடைந்து நேற்று 20 பேர் வீடு திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x