Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

சென்னை அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் :

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் அலகு-1 மற்றும் அலகு-2 என இரு பிரிவுகளில், தலா 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. இதில், அலகு ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கடந்த 2018 ஜனவரியில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு,பழுதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், அலகு இரண்டில் வழக்கம்போல அணுமின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அலகு 1-ல் மின் உற்பத்தி தொடங்கப்படாமல் உள்ளதால், தமிழகத்துக்கு தொடர்ந்து மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று முன்தினம் முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும், மீண்டும் அணுமின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அணுமின் நிலைய ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x