Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM

602 காவலர்களுக்கு - வாக்குச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 602 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 602 வாக்குச்சாவடிகளில் 602 காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள், வாக்குச்சாவடிகளில் பணி நியமனம் செய்வதற்கான கணினி குலுக்கல் நடைமுறை நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் காவல் தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு காவலர் வீதம் கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணி ஆணை இன்று அல்லது நாளை வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x