Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
கிருஷ்ணகிரியில் படிவம் 12-டி அளித்த 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறும் பணி நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆயிரத்து 723 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 543 வாக்காளர்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 266 வாக்காளர்களிடம் தபால் வாக்களிக்க படிவம் 12-டி வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கினர். இதில், 2,332 மூத்த குடிமக்களும், 704 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம், 3,036 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தபால் வாக்களிக்க படிவம் பெறப்பட்டுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் கடந்த 2 நாட்களாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்.
இப்பணியில், மண்டல அலுவலர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர், ஒரு கேமரா மேன் மற்றும் ஒரு போலீஸ் என ஐந்து பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பூத் கமிட்டி அல்லது வட்டச் செயலாளர் முன்னிலையில், மூத்த குடிமக்களிடம் விண்ணப்பங்களில் கையொப்பம் பெற்று, வாக்குச்சீட்டில் உள்ள சின்னத்தில் டிக் செய்யச் சொல்லி, அதைப் பெற்று கவரில் வைத்து சீல் வைக்கின்றனர். இவற்றை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT