Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

பழநி பங்குனி உத்திர திருவிழாவுக்கு : சிறப்பு பேருந்துகள் இயக்கம் :

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் பழநி பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு போக்குவரத்துக் கழக (மதுரை) மேலாண்மை இயக்குநர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பழநியில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பழநிக்கும், பழநியில் இருந்து மற்ற ஊர்களுக்கும் மார்ச் 27-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x