Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயில் மயான சூறைத் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 12-ம் தேதி மஹா சிவராத்திரி நிகழ்ச்சியும், 13-ம் தேதி பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு, அம்மன் மயான சூறைக்கு புறப்படுதலும் நடைபெற்றது. 14-ம் தேதி விடாய் உற்சவமும், 15-ம் தேதி அக்னி குண்டம் தீமிதி விழாவும் நடந்தது. நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
இதில், சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மாலை மாற்றி, சீர் வரிசைகளுடன் சிவன், பார்வதிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.
இன்று இரவு கும்ப பூஜை, கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT