Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
கிருஷ்ணகிரியில் 26-ம் தேதி தபால் துறை குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவல கத்தில், வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அளவிலான தபால்துறையைச் சேர்ந்த குறை தீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
அஞ்சலக வாடிக்கை யாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை ‘டாக் அதாலத் கேஸ்’ என தபால் உறைகள் மீது எழுதி வரும் 24-ம் தேதிக்குள் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி மாவட்டம் 635001 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
நீங்கள் அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். பதிவு தபால், எம்ஓ., விபி., இன்சூர்டு லெட்டர், விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.
அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விவரம் உள்ளிட் டவை குறிப்பிடப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT