Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM
தஞ்சாவூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து நிலக்கொடை குறித்த கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே அருண் மொழிதேவன்பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வீட்டின் கொல்லைபுறத்தில், ஒரு துண்டுக் கல்வெட்டு கிடப்பதாக, தஞ்சாவூர் சரசுவதி மகால் நுாலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய் வாளருமான மணி.மாறனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மணி.மாறன், பொந்தியாகுளம் தொடக்க பள்ளி தலைமையாசிரியர் கோவிந்த ராஜன், ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மணி.மாறன் கூறியது: சோழர் காலத்தில் தஞ்சாவூர் கூற்றத்தின் புறம் படியாகத் திகழ்ந்த அருண் மொழிதேவன்பேட்டை, மாமன்னன் ராஜராஜனின் பெய ரால் அமைந்த ஊர். இப்பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக வெட்டப்பட்ட லோகமாதேவி மற்றும் அருண் மொழி தேவன் என்று இரண்டு வாய்க்கால்கள் உள்ளன. இதில் அருண்மொழி தேவன் வாய்க்கால் மதகு சீர்செய்யப்பட்டபோது, அங்கிருந்து இக்கல்வெட்டு எடுக் கப்பட்டது.
இக்கல்வெட்டில் ராஜராஜசோழ னின் நிலக்கொடை பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும், வான வன் மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் பெயர் காணப்படு கிறது. இவர், ராஜராஜசோழன் காலத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி. ராஜராஜ சோழனின் 2-வது ஆட்சியாண்டு தொடங்கி 9-வது ஆட்சியாண்டு வரை உள்ள திருப்புறம்பியம் கல்வெட்டிலும், 17-வது ஆட்சி யாண்டு கரந்தை கல்வெட்டிலும் மூவேந்த வேளாண் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருண்மொழிதேவன் பேட்டை யில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு வாசகம் கரந்தை கல் வெட்டில் காணப்படும் வாசகங்கள் போலவே உள்ளது.
அத்துடன், அப்பகுதியில் இடிந்த நிலையில் உள்ள ஒரு சிவன்கோயிலில் பல சிற்பங்கள் சிதைந்துபோய் உள்ளன. அப்படியாக சிதைந்த சிற்பம் ஒன்றில், ஆலிங்கன சந்திரசேகர் மகர தோரணத்தில் அமைந்து அழகுடன் காட்சி தருகின்றார். ஒரு கையளவே உள்ள இச்சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT