Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
நீதிமன்றங்களை முழுமையாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு துணைத் தலைவர் ஏ.நல்லதுரை தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் சிவசுப்பிரமணியன், அமர்சிங், தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் கீர்த்திவாசன், இணைச் செயலாளர் முல்லை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கரோனா தொற்று பரவலை காரணம் காட்டி கீழமை நீதிமன்றங்களில் மூடப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் அறை, நூலகம் ஆகியவற்றை உடனடியாக திறக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறையை மூடக்கூடாது.
அரசு வழக்கறிஞர்கள் தவிர இதர வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியில்லை என்ற முடிவை கைவிட வேண்டும். வழக்கு விசாரணைகளை காணொலி மூலம் நடத்தாமல் நேரில் நடத்த வேண்டும். நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடவேண்டும். கரோனாவால் ஓராண்டு காலம் முடங்கிய அனைத்து நீதிமன்றங்களையும முழுமையாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT