Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM
இரும்பு, சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தஞ்சாவூர், காரைக்கால், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தஞ்சாவூர் மையம் சார்பில், தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மேகன் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கப்பா, பொருளாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் காப்பாளர் ராஜகோபால், சிவில் இன்ஜினீயர்ஸ் அசோசியேஷன் தலைவர் அறிவழகன், மூவேந்தர் அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர் சங்கத் தலைவர் கனகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காரைக்காலில் கட்டுநர் சங்கத்தினர் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்து, கருப்பு பேட்ஜ் அணிந்து, பழைய ரயிலடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் மையத் தலைவர் என்.மணிவண்ணன் தலைமை வகித்தார்.
திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி மைய செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மையத் தலைவர் ஆர்.சரவணன், செயலாளர் ஆர்.சுப்பிரமணி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டக் கிளை சார்பில் பெரம்பலூர் பாலக் கரையில் நேற்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோபிநாத், பொருளாளர் பாலமுருகன் மற்றும் கட்டுமான பொறியாளர்கள் அரவிந்தன், செந்தில்குமார், பாலமுருகன், தர்மராஜ், சிவா, ரவி, கலைநாதன், மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்டுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT