Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

செங்கை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில்வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் நம் கழகத்தின் கோட்டையாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்ற திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது. இனி திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். தனக்குப் பின்னும் நூறு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி புரியும் என்று ஜெயலலிதா கூறிய அந்த பொன்னான வார்த்தைகளை நாம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அதிமுக அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x