Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

திண்டுக்கல்லில் கைதி தப்பியோட்டம்

பழநியில் மொபைல் போன் கடையில் திருட்டு வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கமலக்கண்ணன்(27) என்பவரை போலீஸார் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்திருந்தனர். இவரை வழக்கு விசாரணைக்காக பழநி நீதிமன்றத்துக்கு போலீஸார் ஜெயராம், அசோக் ஆகியோர் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திண்டுக் கல்லுக்கு அழைத்து வந்தனர். சிறைக்குச் செல்லும் முன்பு நேற்று முன்தினம் இரவு ஓட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டனர். அப்போது கமலக்கண்ணன் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பிச்சென்றார். இவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x