Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

கிராம மக்களுடன் ஐ.ஜி. கலந்துரையாடல்

கருவலூரில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய ஐ.ஜி. பெரியய்யா.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 23 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கிராம காவலர் திட்டம்’ தொடங்கப்பட்டுவருகிறது. ஒரு கிராமத்துக்கு ஒரு காவலர் வீதம் நியமிக்கப்படும் இத்திட்டத்தில், பொதுமக்கள் தங்களது கிராமங்களில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள், புதிய நபர்களின் நடமாட்டங்கள், குற்றங்கள் குறித்து தகவல் அளிக்கலாம் எனவும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட கருவலூரில் கிராம காவலர் அறிமுகம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல் ஐ.ஜி. பெரியய்யா கலந்து கொண்டு கிராம காவலரை அறிமுகம் செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x