Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

நூற்பாலையில் தீ

பல்லடம் அடுத்த காமநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்மனோஜ்குமார். இவரது அண்ணன் தனபால்.இருவரும் இணைந்து அதே பகுதியில் நூற்பாலையை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை தொழிலா ளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டபோது, திடீரென ஓர் இயந்திரத்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உடனடியாக உரிமையாளர் மனோஜ்குமார் மற்றும் பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், நூல், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x