Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

துணிக்கடையில் ரூ. 2 லட்சம் திருட்டு

திருப்பூர்

பொங்கலூர் அருகே துணிக்கடையின் மேற்கூரையைப் பிரித்து பணத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது,‘‘திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகேயுள்ள பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அருகேயுள்ள 49.பொல்லிக்காளிபாளையத்தில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 4-ம் தேதி இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கடையை திறக்க வந்தபோது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு, ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. திருட்டில் ஈடுபட்டவர்கள் கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் திருடிச்சென்றிருந்தனர். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x