Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வில் பங்கேற்க சேலம் மாவட்டத்தில் 15,042 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 8,336 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் 31 தேர்வு மையங்களில் 48 தேர்வுக் கூடங்களில் தேர்வு நடைபெற்றது.
சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தேர்வை ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் குரூப் 1 தேர்விற்காக 7 ஆயிரத்து 994 பேர் விண்ணப்பித் திருந்தனர். இவர்கள் தேர்வு எழுத 28 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டு இருந்தன. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 13 மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்கள் உட்பட 4305 பேர் தேர்வில் பங்கேற்றனர். 3689 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நாமக்கல்லில் 4,359 பேர்
நாமக்கல் மாவட்டத்தில் 25 மையங்களில் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு 7,741 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 4,359 பேர் தேர்வு எழுதினர். தேர்வு பணிகளில் 25 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வு அலுவலர்கள் ஈடுபட்டனர்.நாமக்கல் வடக்கு, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
தருமபுரி-கிருஷ்ணகிரி
அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வுக்கு 5,090 பேர் விண்ணப்பித்திருந்தனர். 17 மையங்களில் நடந்த தேர்வில் 2,408 பேர் பங்கேற்றனர். கிருஷ்ண கிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி ஆய்வு நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT