Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM
தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காட்டில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப் பட்டது.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு, வல்லுண்டாம் பட்டு, அதினாம்பட்டு, நாஞ்சிக் கோட்டை, சூரியம்பட்டி, வடக்குப் பட்டு ஆகிய கிராமங்களில் 1,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் அறுவடையாகும் நெல்லை, பிற பகுதிகளில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்ய அதிக நாட்கள் காத் திருக்க வேண்டியிருந்ததால், விவ சாயிகளுக்கு கூடுதல் செலவும், மன உளைச்சலும் ஏற்பட்டு வந்தது. தற்போது, சம்பா நெல் அறுவடை தொடங்கியுள்ளதால், நெல்லை உரிய நேரத்தில் விற்பனை செய்வதற்கு வசதியாக வேங்கராயன்குடிக்காட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தை திறக்க வேண்டும் என கடந்த டிச.24-ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இங்கு உடனடி யாக புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான உத்த ரவை ஆட்சியர் பிறப்பித்தார். பின்னர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு உள்ளிட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து, நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, வேங்கராயன்குடிக்காட்டில் நேற்று புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் சி.பன்னீர்செல்வம், கொள்முதல் அலுவலர்கள் கே.கணேசன், டேவிட், உதவியாளர் ஆர்.கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தரவிமல்நாதன், இயற்கை விவசாயி ஏரகரம் சுவாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் விவசாயி கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT