Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

காதலி கழுத்தை அறுத்து காதலனும் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (27). ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபா டால் மனைவியை பிரிந்து, சென்னையில் தங்கி ஓட்டுநராக வேலைசெய்து வந்தார். இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த எழில்மதி (21) என்ற இளம்பெண்ணுடன் ஓராண் டுக்கு முன் வெங்கடேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடை வில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியிலுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் தங்கி எழில்மதி வேலை செய்து வந்தார். காதலியை பார்க்க நேற்று முன்தினம் வெங்கடேஷ் திருப்பூர் வந்து, தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவரை பார்க்க எழில்மதி நேற்று முன்தினம் மாலை விடுதிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. இதில் கோபமடைந்த வெங்கடேஷ், தான் வைத்திருந்த கத்தியால் காதலியின் கழுத்தைஅறுத்து, தானும் கழுத்தை அறுத் துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

சத்தம் கேட்டு தங்கும் விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது, உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு அவிநாசி சாலை புஷ்பா சந்திப்பு அருகே தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். வெங்கடேஷ் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x