Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
திருப்பரங்குன்றத்தில் நேற்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் ஜிஆர்.கார்த்தி தலைமையில் நடைபெற்றது.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மாடுபிடி வீரர்களுக்கு தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜனவரியோடு ஜல்லிக்கட்டை முடிக்காமல், தொடர்ந்து ஆறுமாதம் நடத்த அனுமதிவழங்க வேண்டும். ஜனவரி 15-ல் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாயத்தினர் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுகட்டு விழா நடத்துவதற்குப் புதிதாக அனுமதி கேட்டால் அதிகாரிகள் கெடுபிடி காட்டாமல் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT