Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

‘பிரிட்டனில் இருந்து திருப்பூர் திரும்பியவர்களுக்கு தொற்று இல்லை’

பிரிட்டனில் இருந்து திருப்பூர் திரும்பியவர்களுக்கு 2-வது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதும், யாருக்கும் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் இம்மாதம் தொடக்கம் முதல்தற்போது வரை பிரிட்டன் சென்றுதிரும்பிய 11 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் தொற்று இல்லை என உறுதியானது.

இந்நிலையில், வீரியமிக்க கரோனா வைரஸ் பரவி வருவதால்,பிரிட்டன் சென்று திரும்பிய அனைவருக்கும் 2-வது முறையாக மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x