Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM

அனைத்து நிறுவனங்களும் ஜன.31-க்குள் தொழிலாளர் நல நிதியை செலுத்த வேண்டுகோள்

திருப்பூர்

திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இரா.மலர்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டம் 1972-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலநிதி சட்டம் 1972 பிரிவு 2 (டி)-ன்படிதொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள் மற்றும் 5 அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருதொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ஒவ்வொருவருக்கும் ரூ.10, வேலையளிப்பவர் பங்காக ரூ.20 என மொத்தம் ரூ.30 தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை, வரும் ஜன. 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள், www.lwb.tn.gov.in என்ற இணையவழியில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,வங்கி வரைவோலையாக ஜன.31-ம் தேதிக்கு முன்பாக, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006 என்ற முகவயில் அனுப்பிவைக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x