Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாநகர் ராயபுரம் அருகே குமரப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.ஜீவானந்தம் (20), மதுரை சுந்தரம்பட்டியைச் சேர்ந்த ஏ.சதாம் உசேன் (20), நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியைச் சேர்ந்த பி.நௌஃபல் (20) ஆகிய 3 பேரும், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட நெசவாளர் காலனி ஈஸ்வரன் கோவில் அருகே, ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்த ஜி.பழனிசாமி என்பவரை வழிமறித்து பிளேடால் முகத்தை கிழித்து ரூ.3500 பணத்தை பறித்துச் சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஜீவானந்தம் மீது ஏற்கெனவே வடக்கு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும், சதாம் உசேன் மீது நான்கு திருட்டு வழக்குகளும், நௌஃபல் மீது பல்லடம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும், கோவை மாநகரில் மூன்று திருட்டு வழக்குகளும், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகளும் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு நகல்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் அளிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x