Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

குறுகியகால இடைவெளியில் ஆயிரம் தெருமுனைக் கூட்டங்கள் பாஜக பிரச்சார பிரிவு முடிவு

பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டு பிரிவின் மாநில செயற்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நேற்று நடைபெற்றது.

பிரச்சார பிரிவின் மாநிலத் தலைவர் குமரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் டி.எம்.தங்கராஜன், எஸ்.மகேஷ், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், பிரச்சார பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் திராவிட கோட்டையை உடைத்து ஆன்மீகஅரசாட்சியை அமைக்க வேண்டும், மத்திய அரசு செயல்படுத்திவரும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, செல்வ மகள் மற்றும் செல்வ மகன் சேமிப்புத்திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமரின்படம் வைக்க வேண்டும் என்பது அரசின் வழிகாட்டுதலாக இருந்தபோதும், பிரதமரின் படங்கள் அரசுஅலுவலகங்களில் வைக்கப்படுவதில்லை. பிரதமரின் படம் அரசுஅலுவலகங்களில் இடம்பெறஆவன செய்ய வேண்டும். குறுகியகால இடைவெளியில் மாநிலம் முழுவதும் ஆயிரம் தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x