Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

திருப்பூர்

தெருவிளக்கு எரியாமல் இருப்பதைக் கண்டித்து, தீப்பந்தம் ஏற்றி திருப்பூர் மாநகர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர் 15-வது வார்டு மாரப்பகவுண்டர் லே-அவுட்டில்வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதைக்கண்டித்து எரியாததெருவிளக்குகள் உள்ள மின்கம்பத்தில் தீப்பந்தங்களை ஏற்றினோம். எங்கள் பிரச்சினையை மாநகராட்சியும், மின்வாரியமும் கண்டுகொள்ளாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x