Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியில் காளிதாஸ்(30) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் 2015-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் காளிதாஸை கைது செய்தார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி அம்பிகா விசாரித்து வந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அனிதா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில், "குற்றவாளி காளிதாஸுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாத கால கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x