Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

தேர்தல் பணியை வேகப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என, அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்ற பின்பு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.

மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் மற்றும் உடுமலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும். பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி 4 லட்சம் வாக்குகள் கொண்ட மிகப்பெரிய தொகுதி. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். மக்களுக்காக அதிமுக என்றும் உழைக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வரும் தேர்தலில், அதிமுகவுக்கு மக்கள் வழங்குவர்’’ என்றார்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், பரமசிவம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x