Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

வி.சி.க பிரமுகர் கைது

போக்ஸோ வழக்கில் தொடர்புடையவரை தப்பிக்க உதவிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளரை நேற்றிரவு மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகேயுள்ள அய்யம்பாளையம் சின்ன ஒலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (19). அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், சிறுமிக்கு வாட்ஸ்-அப் மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவிநாசி அனைத்து மகளிர் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிக்க உதவி செய்ததாக அவிநாசி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் மாரிசாமி என்பவரை நேற்றிரவு அவிநாசி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x