Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

கிராம உதவியாளர் சங்கக் கூட்டம்

கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் தொட்டிபாளையத் தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க வட்ட கூட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில், ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியபணப்பயன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு நிலை ஓய்வூதியம் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x