Published : 16 Nov 2020 03:13 AM
Last Updated : 16 Nov 2020 03:13 AM

பூட்டை உடைத்து நகை திருட்டு

திருப்பூர் வஞ்சிபாளையம் அருகேயுள்ள முருகம்பாளையம் மாகாளி அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (34), இவர் சொந்தமாக எலெக்ட்ரிக்கல் கடைநடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில் சதீஸ்குமாரின் தாயார் நேற்று அங்கே சென்று பார்த்தபோது சதீஸ்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருந்தது, தெரியவந்தது. சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீஸார் ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வழக்கு பதிவு செய்துள்ளபோலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராபதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x