Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் திமுக ஆலோசனை கூட்டம்திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.

திண்டுக்கல்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் திமுக நிர்வாகிகள் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் சீலப்பாடியில் நடந்த கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். புதிதாக கட்சியில் சேர்ந்தோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் ஜோதீஸ்வரன், சுப்பிரமணி, தர்மராஜ், ஒன்றியத் தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x