Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை போலீஸார் அழைத்து வந்தனர். படம்: ஆர்.அசோக்

மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் தொடங்கியது. காவல் ஆய்வாளர் தர் உட்பட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இதில் பால்துரை என்பவர் கரோனாவால் உயிரிழந் தார். தர் உட்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி வடிவேல் முன்னிலையில் நேற்று தொடங்கியது. இதையடுத்து தர் உட்பட 9 பேரும் நீதிமன்றத் தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேருக்கும் 2,027 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் தர், `சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்கவும், வழக்கறிஞரை சந்திக் கவும் அனுமதி வழங்க வேண்டும்’ என, நீதிபதியிடம் தெரிவித்தார்.

அடுத்த விசாரணையை டிச.10-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x