Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை

திருப்பூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் வந்த முதல்வரை சந்தித்து விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இருந்தநிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதனால், மேல்நீராற்றிலிருத்து பிரதான பாசனஅணையானதிருமூர்த்தி அணைக்கு ஆறு மணி நேரத்தில்தண்ணீர் வந்து சேரும். குறிப்பாக, இந்த ஆண்டும் மேல்நீராறு அணையிலிருந்து உபரியாக 9 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது.

ஆனால், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் பாசனத்துக்கு கிடைக்கும் என்ற நிலையில், அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. எனவே, பிஏபி ஒப்பந்தத்தில் உள்ளபடி நல்லாறு அணையை அமைக்க வேண்டும் மற்றும் நீரைத்தேக்கி வைக்க பயன்படும் ஆனைமலை அணை அமைக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு பகுதியில்ஏற்கெனவே திட்டமிடப்பட்டு விடுபட்டுள்ள பல்வேறு குளம், குட்டைகளை, உடனடியாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டும். அமராவதி ஆறு - உப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக எழுதி, தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x