Published : 30 Oct 2020 03:14 AM
Last Updated : 30 Oct 2020 03:14 AM

கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 47 பேருக்கும், தஞ்சாவூரில் 88 பேருக்கும், திருவாரூரில் 45 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 37 பேருக்கும், புதுக்கோட்டையில் 28 பேருக்கும், கரூரில் 28 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், அரியலூரில் 9 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 67 பேர், அரியலூரில் 8 பேர், கரூரில் 22 பேர், திருவாரூரில் 27 பேர், தஞ்சாவூரில் 66 பேர், புதுக்கோட்டையில் 36 பேர், நாகப்பட்டினத்தில் 38 பேர், பெரம்பலூரில் 16 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மேலும், திருவாரூரில் 4 பேர், நாகப்பட்டினத்தில் 2 பேர், தஞ்சாவூரில் ஒருவர் என 7 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x