Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM

விழிப்புணர்வு பிரச்சாரம் :

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக புவி வெப்பமாதலை தடுக்கும் பொருட்டும், மின்சார வாகனங்களை மக்கள் பயன் படுத்த ஊக்குவிக்கும் பொருட்டும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மரபு சாரா எரிசக்தி வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் பி. செல்வராஜ் தொடங்கி வைத்தார். மேற்பார்வை மின் பொறியாளர் எம். வெங்கடேஷ் மணி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி நகர்ப்புற செயற் பொறியாளர் எஸ். முத்துக்குட்டி, பழைய பேட்டை உதவி செயற்பொறியாளர் ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x