Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

பாஜக அலுவலகம் திறப்பு :

திருநெல்வேலியில் மாவட்ட பாஜக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. கட்சி தலைவர் ஜே.பி. நட்டா காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் பாஜக அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் திறப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று புதிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார். திருப்பூரிலிருந்து திருநெல்வேலி அலுவலகத்தை காணொலி மூலம் அவர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவுக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.மகாராஜன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தயாசங்கர் முன்னிலை வகித்தார். வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜ கண்ணன், சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ராமானுஜம், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், சத்குரு சீனிவாச சித்தர், தமாகா மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x