Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் :

திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில், தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் (எண் 06037) சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் (எண் 06038) நாகர்கோவிலிலிருந்து நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். அத்துடன் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (எண் 06040) நவம்பர் 7-ம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக சென்று மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (எண் 06049) தாம்பரத்திலிருந்து நவம்பர் 8-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை, கோவில்பட்டி வழியாக சென்று மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ,கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x