Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM

கல்லூரியில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு :

தென்காசி

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.1.93 கோடி மதிப்பில் கூடுதலாக கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வக கட்டிடங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சிமூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதையடுத்து, கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் குத்துவிளக்கேற்றினார்.

தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எஸ்.பழனி எம்எல்ஏ, வருவாய் கோட்டாட்சியர் ராமசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியவாதிஷ்வரன், உதவி பொறியாளர் நல்லாசிங், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன், தங்கையா, கல்லூரி முதல்வர் (பொ) ஜெயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x