Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM

விவசாயி கொலை :

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே உள்ள வைரவன்குளத்தைச் சேர்ந்தவர் கருத்தப்பாண் டியன் (64). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் தனது மகன் கார்த்திகேயன் (32) என்பவருடன் வரப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வயலைச் சேர்ந்த சந்தன பாண்டியன்(40) என்பவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அரிவா ளால் வெட்டியதில் கருத்தப் பாண்டியன் காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சொக்கம் பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சந்தன பாண்டி யனை கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கருத்தப் பாண்டியன் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x