Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM

நெல்லை, தென்காசியில் பரவலாக மழை :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 27.60 மி.மீ. மழை பதிவானது. நம்பியாறு அணையில் 24 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 11.60 மி.மீ., ராதாபுரம், கொடுமுடியாறு அணை, சேர்வலாறில் தலா 5 மி.மீ., மணிமுத்தாறில் 3.20 மி.மீ., பாபநாசத்தில் 3 மி.மீ., களக்காட்டில் 2.60 மி.மீ., பாளையங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x