Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM

சீதபற்பநல்லூர் அருகே வீடு புகுந்து நகை திருடியவர் கைது :

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் அருகே உள்ள வல்லவன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(35). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து, நகைகளை மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x